துபாயில் கைது செய்யப்பட்ட “கொண்ட ரஞ்சி” இலங்கையில் கைது
துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக கூறப்படும் “கொண்ட ரஞ்சி” என அழைக்கப்படும் ரஞ்சித் குமார், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, CID அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என முன்னதாக பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த இவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் அவர் துபாயில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பணத்தை சட்டவிரோதமாக சலவை செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பியமை தொடர்பான விசாரணைகளுடனும் அவருக்கு தொடர்பு இருப்பதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே